search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவ, மாணவிகளுக்குமாவட்ட அளவிலான கலைப்போட்டி
    X

    பள்ளி மாணவ, மாணவிகளுக்குமாவட்ட அளவிலான கலைப்போட்டி

    அரியலூரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கலைப்போட்டி

    அரியலூர்,

    அரியலூரில், பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நடைபெறுகிறது. அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி, நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, செயின்ட் மேரீஸ் பள்ளி ஆகிய பள்ளிகளில் போட்டி நடைபெற்று வருகிறது.

    போட்டியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி தொடக்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா, உதவி திட்ட அலுவலர் பன்னீர்செல்வம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமச் சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம், 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் படைப்பாற் றலை வளர்க்கவும், நமது பாரம்பரிய கலைகளை உயிர்ப்புடன் வைத்திருக்க வும் வாய்ப்பாட்டு இசை, கருவி இசை, நடனம், காண்கலை, நாடகம் என்பன உள்ளிட்ட தலைப்பு களில் இன்றுவரை நடை பெறும் இப்போட்டி களில் 50 பள்ளிகளில் இருந்து 800 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிகாட்டி னர்.

    போட்டிகளில் முதல் 3 இடங்கள் பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். முதலிடம் பெறுபவர் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×