search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் சைக்கிள் போட்டி
    X

    அரசு பள்ளியில் சைக்கிள் போட்டி

    • அரசு பள்ளியில் சைக்கிள் போட்டி நடைபெற்றது.
    • சப்-இன்ஸ்பெக்டர்கள் தொடங்கி வைத்தனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வருவாய் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டி 14, 17, 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு தனித்தனியாக நடைபெற்றது. இதனை விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், அன்பழகன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த போட்டி வி.கைகாட்டி-முனியங்குறிச்சி பாதையில் ஆரம்பிக்கப்பட்டு விக்கிரமங்கலம் பஸ் நிலையம் அருகே நிறைவடைந்தது. இந்த போட்டியில் கலந்து கொண்டவர்கள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி சென்றனர். இதில் வெற்றி பெற்ற 12 மாணவ-மாணவிகளுக்கு விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அறிவழகன் பரிசுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது."

    Next Story
    ×