மாலை அணிந்து விரதம் தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்

அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கியனர் கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி
மாலை அணிந்து விரதம் தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்
Published on

அரியலூர்:

கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி அரியலூர் மாவட்ட த்திலுள்ள பல்வேறு கோயிலி களில் ஆயிரம்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

கேரளம் மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மண்டல பூஜை, மகர விளக்குப் பூஜை நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.

இதையடுத்து கார்த்திகை மாதம் முதல் நாளில் இருந்து அரியலூர் பால பிரசன்ன விநாயகர் கோயிலில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

இதை போல் மாவட்டத்திலுள்ள பெரும்பாலன கோயிலில்களில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். அவர்களுக்கு குருசாமிகள் சந்தன மாலை அணிவித்தனர்.கார்த்திகை மாதப்பிறப்பை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகளும், வழிபாடும் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com