search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கலை போட்டிகள்
    X

    பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கலை போட்டிகள்

    • பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கலை போட்டிகள் நடந்தன.
    • 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும்

    அரியலூர்

    ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அரியலூர் மாவட்டம், அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளின் படைப்பாற்றலை வளர்க்கவும், நமது பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறைகளிடம் உயிர்ப்புடன் வைத்திருக்கவும், வாய்ப்பாட்டிசை, கருவிசை, நடனம், காட்சிகலை மற்றும் தனிநபர் நடிப்பு என்னும் 5 தலைப்புகளில் கலை பண்பாட்டு திருவிழா 2023-24-ம் கல்வி ஆண்டின் போட்டிகள் நேற்று ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வரவேற்று பேசினார்.

    Next Story
    ×