பெண்கள் வங்கி கணக்கு தொடங்க ஏற்பாடு

அரியலூரில் பெண்கள் வங்கி கணக்கு தொடங்க கூட்டுறவு வங்கி ஏற்பாடு செய்துள்ளதுகலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்காக வங்கி கணக்கு தொடங்க ஏற்பாடு
பெண்கள் வங்கி கணக்கு தொடங்க ஏற்பாடு
Published on

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக கூட்டுறவு வங்கியில் முன்வைப்பு தொகை செலுத்தாமல் சேமிப்பு கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பபட்டுள்ளதாக திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கி அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் நாளை(24 ஆம் தேதி) தொடங்குகின்றன.இந்த திட்டத்தில் பயன்பெற ஒவ்வொரு குடும்பத்திலும் ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்களில் 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளவர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க, வீடு தேடி வழங்கப்படும் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து அதனை முகாம் நடக்கும் நாளில் கொடுக்க வேண்டும். விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், மின் கட்டண அட்டை ஆகியவற்றின் அசல் எடுத்துச்செல்ல வேண்டும்.இந்த திட்டத்தில் வங்கி கணக்கு கட்டாயம் இருக்க வேண்டும். வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்காக அரியலூர் மாவட்டத்தில் திருமானூர், கீழப்பழுவூர், தா.பழூர், ஆண்டிமடம், அரியலூர், வி.கைகாட்டி, ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, செந்துறை ஆகிய 9 இடங்களில் திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் சார்பில் முகாம் நடத்தப்படுகிறது. முன்வைப்பு தொகை இல்லாமல் இந்த சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கு 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றின் நகல் மற்றும் அசல் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். கட்டணமோ, குறைந்தபட்ச இருப்புத் தொகையோ செலுத்தாமல் சேமிப்பு கணக்கு தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது 

X

Maalai Malar
www.maalaimalar.com