அரியலூர் மாவட்டத்தில்168 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

168 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்புஅரியலூர் மாவட்டத்தில் 168 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு சீர்வரிசை பொருள்கள் மற்றும் 5 வகையான உணவுகளை வழங்கி வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தார்.
அரியலூர் மாவட்டத்தில்168 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
Published on

அரியலூர், அரியலூரிலுள்ள தனியார் திருமண மண்ட பத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் கர்ப்பிணி பெண்க ளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஒருங்கிணை ந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அன்பரசி தலைமை வகித்தார். சட்டப் பேரவை உறுப்பினர் சின்னப்பா கலந்து கொண்டு அரியலூர் வட்டாரத்துக்கு உட்பட்ட 168 கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசை பொருள்கள் மற்றும் 5 வகையான உணவுகளை வழங்கி வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் சுசிலா, வட்டார மருத்துவ அலுவலர் சத்யா, வாலாஜ நகரம் ஊராட்சி மன்றத் தலைவர் அபிநயா இளையராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com