search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புத்தக திருவிழாவை சிறப்பாக நடத்திய கலெக்டருக்கு பாராட்டு
    X

    முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ.வுக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் கேடயம் வழங்கினார்.

    புத்தக திருவிழாவை சிறப்பாக நடத்திய கலெக்டருக்கு பாராட்டு

    • புத்தக திருவிழாவின் நிறைவு நாளில் “மானுடம் வெல்லும்” என்ற தலைப்பில் முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ பேசினார்.
    • மறைந்த மதுரை ஆதீனத்திற்கும் நாகூர் ஹனீபாவுக்கும் இருந்த நட்பின் ஆழத்தை விளக்கி பேசினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் - பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய புத்தகத் திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது. நாகையில் நடத்தப்பட்ட முதல் புத்தகத் திருவிழாவின் நிறைவு நாளில், "மானுடம் வெல்லும்" என்ற தலைப்பில் நாகை எம்.எல்.ஏ முகமது ஷாநவாஸ் பேசினார்.நாகூர் தர்கா, வேளா ங்கண்ணி தேவாலயம், சிக்கல் சிங்காரவேலர் கோவில் ஆகிய மூன்று திருத்தலங்களுக்கும் மதங்களை கடந்து மக்கள் வந்து செல்வதன் மூலம் மானுடம் வென்றது. மண்டைக்காடு கலவரத்தின் போது இந்துக்களுக்கும் கிறித்தவர்களுக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்த, சைவ மடாதிபதியான குன்றக்குடி அடிகளார் மீன் கூடையை சுமந்து சென்றதையும், மறைந்த மதுரை ஆதீனத்திற்கும் நாகூர் ஹனீபாவுக்கும் இருந்த நட்பின் ஆழத்தையும் விளக்கிப் பேசினார்.

    புத்தக திருவிழா ஏற்பாடுகளை சிறப்புடன் செய்திருந்த மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ பாராட்டு தெரிவித்தார்.

    Next Story
    ×