search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்ட அளவிலான  சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்ற  வீரர்களுக்கு பாராட்டு விழா
    X

    பாராட்டு விழாவில் கலந்து கொண்ட சிலம்ப வீரர்களை படத்தில் காணலாம்

    மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டு விழா

    • சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா பாளை புதுக்குளத்தில் நடைபெற்றது
    • புதுக்குளம் ஊராட்சிமன்ற தலைவர் முத்துக்குட்டி பாண்டியன் தலைமை தாங்கினார்.

    நெல்லை:

    தமிழ்நாடு அமைச்சூர் சிலம்பம் சங்கம் சார்பில் நடைபெற்ற 2-வது மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற வர்களுக்கான பாராட்டு விழா பாளை புதுக்குளத்தில் நடைபெற்றது.

    சிலம்பம் பள்ளியின் தலைவர் ஜோசப்குமார் வரவேற்றார். புதுக்குளம் ஊராட்சிமன்ற தலைவர் முத்துக்குட்டி பாண்டியன் தலைமை தாங்கினார். ஊராட்சிமன்ற துணைத் தலைவி அந்தோணியம்மாள் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக நெல்லை அமைச்சூர் சிலம்பம் சங்கம் பொருளாளர் காணி, மின்சார வாரியத்தின் இளநிலை பொறியாளர் விஜயநாராயணம், ஊசிகாட்டான் ரூபன், இந்திரன் சிலம்பம் பள்ளி செயலாளர் சிவக்குமார், வேந்தன் நெல்மணி, செயலாளர்களான சின்னத்துரை சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முடிவில் செயலாளர் ஜென்சி நன்றி கூறினார்.

    விழா ஏற்பாடுகளை பதிவை சிலம்பம் பள்ளியின் பொருளாளர் சாமுவேல், பானுமதி, டேனியல், மரிய கோல்டா சிறப்பாக செய்திருந்தனர்.

    Next Story
    ×