search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மேம்பாட்டுக்காக ஆயத்த ஆடையக உற்பத்தி அலகில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்
    X

    பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மேம்பாட்டுக்காக ஆயத்த ஆடையக உற்பத்தி அலகில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்

    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் அறிவிப்பு
    • குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாடு தொடர்பாக ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைத்திட ஆண்கள், பெண்கள் என மொத்தம் 10 நபர்களை கொண்ட உறுப்பினர்கள் குழுவாக அமைத்திட வேண்டும். அக்குழுவிற்கு ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைத்திட தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.3 லட்சம் வழங்கிட அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

    தையல் தொழிலில் ஈடுபட்டு வரும் பிற்பட்ட வகுப்பினர், மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த (ஆண், பெண்) மக்கள் 10 நபர்கள் கொண்ட குழுவாக குமரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவங்கள் பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்து பெறப்படும் விண்ணப்ப படிவங்கள் தேர்வு குழுவினரால் பரிசீலனை செய்து தேர்வு செய்யப்படும். பின்னர் அந்த விண்ணப்பங்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிந்துரை செய்யப்படும்.

    விண்ணப்பதாரர்களின் தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்:

    குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழு விற்கு முன்னுரிமை வழங்கப்படும். விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதர வற்ற விதவை பெண்கள் அமைந்துள்ன குழு விற்கு முன்னுரிமை அளிக் கப்படும். 10 நபர்களை கொண்டு ஒரு குழுவாக இருத்தல் வேண்டும். 10 நபர்களுக்கும் தையல் தொழில் தெரிந்திருந்தல் அவசியம், குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    மேலும் கூடுதல் விவரங்க ளுக்கு நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×