search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளின் நினைவு நாள் அனுசரிப்பு
    X

    ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளின் படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    தஞ்சையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளின் நினைவு நாள் அனுசரிப்பு

    • ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    • ஸ்டெர்லைட் ஆலை எந்த ஒரு வடிவத்தில் செயல்பட வந்தாலும் தமிழ்நாடு அரசு அனுமதிக்க கூடாது.

    தஞ்சாவூா்:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 2018 -ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளின் 5-ம் ஆண்டு நினைவு நாள் மக்கள் அதிகாரம் சார்பில் தஞ்சாவூர் ரெயிலடி முன்பு மாவட்ட செயலாளர் தேவா தலைமையில் நடைபெற்றது.

    இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், எழுத்தாளர் சாம்பான், ஆதி தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ரங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்வில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எந்த ஒரு வடிவத்தில் செயல்பட வந்தாலும் தமிழ்நாடு அரசு அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்த ப்பட்டன.

    இதில் ஆதித்தமிழர் பேரவை இளைஞர் இயக்க நிர்வாகி பிரேம்குமார்நிவாஸ், கும்பகோணம் அரசு போக்குவரத்து சங்க ஏ. ஐ .டி .யு.சி பொதுச் செயலாளர் தாமரைச்செல்வன், ஆட்டோ சங்க நிர்வாகிகள் ஜோசப், சேகர், கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×