search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கபிலர்மலை பகுதியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    கபிலர்மலை பகுதியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • கபிலர்மலை பகுதியில் வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கூலி தொழிலாளர்களுக்கு போதை பொருள் தடுப்பு குறித்து மாவட்ட மன நல திட்டத்தின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத் தப்பட்டது.
    • போதைப் பழக்கம் ஒரு மனநோய் என உலக சுகாதார நிறுவனம் வரையறை செய்கிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை பகுதியில் வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கூலி தொழிலாளர்களுக்கு போதை பொருள் தடுப்பு குறித்து மாவட்ட மன நல திட்டத்தின் சார்பில் விழிப்பு ணர்வு ஏற்படுத் தப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட மனநல மருத்துவர் ஜெயந்தி மற்றும் மன நல ஆலோசகர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகையில், போதை மருந்து பழக்கம் ஒருவரின் உடல் நலத்தையும், மன நலத்தையும் வெகுவா கப் பாதிக்கும். இளைய சமுதாயத்தினரிடையே வேகமாக பரவும் போதை பழக்கம் புற்றுநோயை விடக் கொடியது.

    போதை மருந்துப் பழக்கத்தினால் ஈரல் கோளாறுகள், தூக்க மின்மை, குற்றம் புரிதல், சமூக விரோத நடவடிக் கைகள் ஏற்படுகிறது. போதைப் பழக்கம் ஒரு மனநோய் என உலக சுகாதார நிறுவனம் வரை யறை செய்கிறது.

    எனவே தக்க ஆலோ சனை மற்றும் சிகிச்சை எடுத்தால் போதை பொருள் தாக்கத்தில் இருந்து விடு படலாம். அருகில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    Next Story
    ×