search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிதம்பரத்தில் போதைப்பொருள் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    சிதம்பரத்தில் போதைப்பொருள் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பு
    • சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    கடலூர், செப்.20-

    கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கடலூர் மாவட்டத்தில் 24 ந்தேதி போதைப்பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நம்ம ஸ்ட்ரீட் நிகழ்ச்சி (ஆடல் பாடல் விளையாட்டு விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள்) காலை 6 மணி முதல் 10 மணி வரை சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக நடைபெற உள்ளது.

    எனவே, மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்கள், சமூக நல அமைப்பினர், தன்னார்வலர்கள் மற்றும் அனைத்து பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு நிகழ்ச்சியை கண்டு களிக்கவும் கடலூர் மாவ ட்டத்தை போதை பொருள் இல்லா மாவட்டமாக மாற்ற மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயலாற்றவும் கேட்டுக்கொள்ள ப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×