குலசேகரன்பட்டினத்தில் இன்று இரவு அன்னை முத்தாரம்மன் பார்வதி கோலத்தில் எழுந்தருளுகிறார்

3-ம் திருநாளான இன்று காலை முதல் இரவு வரை மண்டகபடிதாரின் சிறப்பு அபிசேகம் தொடர்ந்து நடைபெறும். ஏராளமான பக்தர்கள் இன்றும் காலையிலே கடற்கரைக்கு வந்து கடல்நீர் தீர்த்தம் எடுத்துச் சென்றனர்.
நேற்று இரவு முத்தாரம்மன் விசுவகர்மேசுவரர் கோலத்தில் பவனி வந்த காட்சி.
நேற்று இரவு முத்தாரம்மன் விசுவகர்மேசுவரர் கோலத்தில் பவனி வந்த காட்சி.
Published on

உடன்குடி:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெருந்திருவிழாவில் இன்று 3-ம் திருநாள் ஆகும். காலை முதல் இரவு வரை மண்டகபடிதாரின் சிறப்பு அபிசேகம் தொடர்ந்து நடைபெறும்.

மாலை 3 மணி முதல்சமய சொற்பொழிவும், தொடர்ந்து இரவு 8 மணிக்கு பரதநாட்டியம் நடைபெறும். இரவு 9 மணிக்கு அன்னை முத்தாரம்மன் ரிசபவாகனத்தில் பார்வதி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார். ஏராளமான பக்தர்கள் இன்றும் காலையிலே கடற்கரைக்கு வந்துகடல் நீர் தீர்த்தம் எடுத்துச் சென்றனர்.

இதைப்போல விரதம் இருந்து வந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தங்களது வலது கையில் கோவிலில் இலவசமாக வழங்கும் காப்பு என்ற மஞ்சள் கயிறு வாங்கி கட்டிக் கொண்டனர். காப்பு கட்டிய பின்பு வேடம் அணிந்து ஊர்ஊராகசென்று அம்மன் பெயரில் காணிக்கை வாங்குவார்கள், அந்த காணிக்கைகளை 10-ம் திருநாள் அன்று கோவிலில் கொண்டு சேர்ப்பார்கள்.

தசரா திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, தக்கார் மற்றும் உதவி ஆணையர் சங்கர், கோவில் ஆய்வாளர் பகவதி, செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், கணக்கர் டிமிட்ரோ மற்றும் ஆலய ஊழியர்கள் செய்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com