கோவில்பட்டி அருகே பூமாதேவி ஆலயத்தில் அன்னதான பூஜை

பரிவார தெய்வங்களுக்கு பூர்ண கும்பாபிஷேகம் நடைபெற்றது.அனந்த சைதன்யன், கவுசல்யா வள்ளலார் பெருமை என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்.
பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே உள்ள மந்தித்தோப்பு துளசிங்க நகரில் பிரசித்தி பெற்ற அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் பங்குனி முதல் ஞாயிறு அன்னதான பூஜை நடை பெற்றது. அதை தொடர்ந்து காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜையும் காலை 7 மணிக்கு அம்பாள் குருநாதர் மற்றும் பரிவார தெய்வங் களுக்கு மஞ்சள், மா பொடி, திரவியம், பால், தேன், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் பூர்ண கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சோடனை தீபாராதனை லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வ சுப்பிரமணியன் செய்தார். ஆன்மிக சொற்பொழிவாளர் அனந்த சைதன்யன், கவுசல்யா வள்ளலார் பெருமை என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார். இதில் சுப்பாராஜ் சங்கரேஸ்வரி, மாரியப்பன், ஆறுமுகம், துவாரகநாதன், மாரிஸ்வரன், முருகன், விளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, இசக்கிமுத்து, மாரித்தாய், சுந்தரி, உமா மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடு களை பூமாதேவி ஆலய குழுவினர் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com