

ஏரியூர்,
தருமபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பத்திர அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பூவன் காடு பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா (வயது 50). இவர் பூவன் காடு அங்கன்வாடி மையத்தில் தலைமை சமையலராக, 2007 முதல் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் தனபால் இறந்து 7 ஆண்டுகள் ஆகிறது.
இந்நிலையில் தற்போது சித்ராவை அஜ்ஜனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு பணி மாறுதல் வழங்கியுள்ளனர். பணி மாறுதல் ஆணையை பெற வந்த சித்ரா, பணி மாறுதல் ஆணையை பெற மறுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் முன்பு கதறி கதறி அழுதார்.
இது குறித்து சித்ரா கூறியதாவது :-
பத்திர அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பூவண்காடு பகுதியில் தலைமை சமையலராக கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். இந்நிலையில் எவ்வித காரணமும் இன்றி, பூவன் காடு பகுதியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அஜ்ஜன அள்ளி ஊராட்சிக்கு பணி மாறுதல் செய்துள்ளனர்.
ருந்து வசதி இல்லாத குக்கிராம பகுதியில் இருந்து, எவ்வித காரணமும் இன்றி, என்னை 25 கிலோமீட்டர் தொலைவிற்கு பணி மாறுதல் செய்து இருப்பது என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை, உரிய நேரத்திற்கு, புதிய இடத்திற்கு சென்று என்னால் பணி செய்ய இயலாது. இது குறித்து சரியான விளக்கத்தையும் அதிகாரிகள் தர மறுக்கின்றனர். என கூறினார்.