search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துணி துவைக்க சென்றவர்  கிணற்றில் தவறி விழுந்த முதியவர் பலி
    X

    துணி துவைக்க சென்றவர் கிணற்றில் தவறி விழுந்த முதியவர் பலி

    • அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி யுள்ளார்.
    • 8 மணி நேர தேடுதல் போராட்டத்திற்கு பிறகு முதியவரின் உடல் மீட்கப்பட்டது.

    விழுப்புரம்:

    பிரம்மதேசம் காளி யம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 70). இவர் அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளித்துவிட்டு, துணி துவைத்துக் கொண்டி ருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி யுள்ளார். இது குறித்து அருகில் இருந்த பொது மக்கள் பிரம்மதேசம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரி வித்ததின்பேரில், திண்டி வனம் மற்றும் மரக்காணம் தீயணைப்பு துறையினர் கிணற்றில் முதியவரை தேடும் பணியில் ஈடுபட்ட னர்.

    பல மணி நேரம் தேடியும் உடல் கிடைக்காததால், 2 ராட்சத மோட்டார் மூலம் தண்ணீரை வெளி யேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடு பட்டனர். இதனையடுத்து 8 மணி நேர தேடுதல் போராட்டத்திற்கு பிறகு முதியவரின் உடல் மீட்கப்பட்டது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரி சோதனைக்காக முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர், துணி துவைக்க சென்ற முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×