வெள்ளிச்சந்தை அருகே முன்னாள் ராணுவ வீரர் தூக்குபோட்டு தற்கொலை

எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்து ஓய்வு
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

கன்னியாகுமரி:

வெள்ளிச்சந்தை அருகே மணவிளையை சேர்ந்தவர் ஜெகன் ஜோஸ் (வயது 42). இவர் எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்று வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி அமராவதி. போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்.

ஜெகன் ஜோஸ் கோழி பண்ணை நடத்தி வந்தார். கோழிப்பண்ணை நடத்தியதில் அவருக்கு கடன் ஏற்பட்டு அவர் யாரிடமும் பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அமராவதி தனது பணிக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் சமையலறையில் ஜெகன் ஜோஸ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். பணி முடிந்து இரவு வந்த அமராவதி ஜெகன் ஜோஸ் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அமராவதி வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஜெகன் ஜோசிற்கு 2 மகன்கள் உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com