search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பராமரிப்பின்றி கிடக்கும் அம்மா பூங்கா சீரமைக்க கோரிக்கை
    X

    பராமரிப்பின்றி கிடக்கும் பூங்காவை படத்தில் காணலாம்.

    பராமரிப்பின்றி கிடக்கும் அம்மா பூங்கா சீரமைக்க கோரிக்கை

    • தற்போது பூங்காவில் முட்புதர்கள் வளர்ந்து காடுபோல் உள்ளது.
    • பெரும்பாலான விளை யாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளது.

    ஊத்தங்கரை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை காந்திநகர் துவக்கப்பள்ளி அருகே, அம்மா சிறுவர் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

    தொடக்கத்தில் பயன்பாட்டில் இருந்து வந்த சிறுவர் பூங்கா, நாளடைவில் முறையான பராமரிப்பு இன்றி, போதிய பாதுகாப்பு வசதி இல்லாத காரணத்தால், பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

    தற்போது பூங்காவில் முட்புதர்கள் வளர்ந்து காடுபோல் உள்ளது.

    பெரும்பாலான விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளது. பராமரிப்பின்றி இருப்பதால் அப்பகுதி மக்கள் அவதிபட்டு வருகின்றனர்.

    சேதமடைந்து கிடக்கும் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை உடனடியாக சீரமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×