நெல்லை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரிக்கு அமெரிக்க நிறுவனம் விருது

சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனம் சார்பில் பெங்களூரில் மாநாடு நடை பெற்றது. கணினி அறிவியல் துறை தலைவர் அரவிந்த் சுவாமிநாதன், ‘இண்டஸ்ட்ரி ரெடி’ படிப்புகளை வழங்கியதற்காக விருது பெற்றார்
விருது பெற ஊக்கமளித்தோரை ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு பாராட்டிய காட்சி.
விருது பெற ஊக்கமளித்தோரை ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு பாராட்டிய காட்சி.
Published on

நெல்லை:

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோசில் தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனம் சர்வதேச அளவில் சிஸ்கோ நெட்வொர் க்கிங் அகாடமி தொழில் நுட்ப சேவையின் 25 ஆண்டை கொண்டாடுகிறது. அதன் ஒரு பகுதியாக பெங்களூரில் மாநாடு நடை பெற்றது. அதில் இந்தியாவில் சிஸ்கோ நெட்வொ ர்க்கிங் அகாடமி கல்வி திட்டத்தின் நிலையான வளர்ச்சிக்கு மதிப்புமிக்க மற்றும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய கல்வி நிறுவனத்தின் சிஸ்கோ பயிற்றுவிப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இதில் நெல்லை பிரான்சிஸ் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரியின் சார்பாக கணினி அறிவியல் துறை தலைவர் அரவிந்த் சுவாமிநாதன், 'இண்டஸ்ட்ரி ரெடி' படிப்புகளை வழங்கியதற்காக விருது பெற்றார். தமிழகத்தின் தென்மாவட்டத்திலேயே சிஸ்கோ விருதைப் பெற்ற ஒரே நிறுவனம் பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி ஆகும்.

இந்த விருது பெற ஊக்கமளித்த பொதுமேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன், விருது பெற்ற கணினி அறிவியல் துறை தலைவர் அரவிந்த் சுவாமிநாதன் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோரை ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு, நிர்வாக இயக்குநர் அருண்பாபு, தாளாளர் பிரியதர்ஷினி அருண்பாபு ஆகியோர் பாராட்டினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com