search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருத்தாசலத்தில் தி.மு.க பிரமுகரை கொல்ல பீகார் மாநிலத்தில் இருந்து 3 லட்சத்துக்கு துப்பாக்கி, புல்லட் வாங்கியது அம்பலம்
    X

    கைது செய்யப்பட்டவர்களையும் அவர்களை பிடித்த போலீசார்களையும் படத்தில் காணலாம்.

    விருத்தாசலத்தில் தி.மு.க பிரமுகரை கொல்ல பீகார் மாநிலத்தில் இருந்து 3 லட்சத்துக்கு துப்பாக்கி, புல்லட் வாங்கியது அம்பலம்

    • படுகாயம் அடைந்த இளையராஜா தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • திட்டமிட்டபடி ஆடலரசு தரப்பினர் இளைய ராஜாவை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரை சேர்ந்தவர் தியாகராஜன், முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. இவரது மகனான இளையராஜா. தி.மு.க பிரமுகர். நேற்று முன்தினம் மாலை இவர் மணவாளநல்லூர் அருகே விவசாய நிலத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போது 6 பேர் கொண்ட கும்பல் இவரை துப்பாக்கியால் சுட்டது. துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த இளையராஜா தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்யப்ப ட்டது. கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜா ராம் உத்தரவின் பேரில் விருத்தாசலம் டி.எஸ்.பி ஆரோக்கி யராஜ் தலைமை யிலான தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்த தேடுதல் வேட்டையில் தே.கோபுராபுரம் அருகே பதுங்கி இருந்த மணவா ளநல்லூரை ஆடலரசு, புகழேந்தி, சரவணன், வெங்கடேசன், ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த விஜயகுமார், மதுரை திருமங்கலத்தை சேர்ந்த சூர்யா, குறிஞ்சிப்பாடியை சேர்ந்த அருண்குமார் மற்றும் வெங்கடா ம்பேட்டையை சேர்ந்த சதீஸ்வரன் ஆகிய 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்படட்டவர்களிடம் இருந்து 2 நாட்டு துப்பாக்கிகள், 2 இரும்பு ராடுகள், 1 கத்தி, 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீஸ் விசாரணைக்கு பின் விருத்தாசலம் அரசு மருத்து வமனைக்கு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்ப ட்டவர்கள் பின்னர் கோ ர்டில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்க ப்பட்டனர்.

    இதுகுறித்து விருத்தாசலம் டி.எஸ்.பி ஆரோக்கியராஜ் கூறிய தாவது:- இளையராஜாவின் அண்ணன் நீதிராஜன் மணவாள நல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். கடந்த உள்ளாட்சி தேர்த லின்போது ஆடலரசு வின் தாய் மங்கையர்கரசி தேர்தலில் போட்டியிட்டார் அப்போது இளையராஜா தரப்பினருக்கும் ஆடலரசு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் இளையராஜா ஆடலரசுவை தாக்கி உள்ளார். இந்த தாக்குதல் அடிக்கடி நடந்துள்ளது. இந்த விளைவின் காரணமாக ஆடலரசு சென்னையில் உணவு டெலிவரி வேலை செய்யும் பாளைய ங்கோட்டை நண்பரான விஜயகுமாரிடம் உதவி கேட்டுள்ளார். அதன்படி விஜயகுமார் சென்னையில் சலீம் என்பவர் மூலம் பீகாரில் இருந்து ரூ. 3 லட்சத்துக்கு 2 துப்பாக்கிகள் மற்றும் 3 புல்லட்டுகளை கடந்த 2 மாதத்திற்கு முன்பு வாங்கியு ள்ளார். திட்டமிட்டபடி ஆடலரசு தரப்பினர் இளைய ராஜாவை துப்பா க்கியால் சுட்டுள்ளனர். இவர்களுக்கு துப்பாக்கி, புல்லட் வாங்கி கொடுத்த சென்னையை சேர்ந்த சலீமை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் சென்னை விரைந்து ள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்

    Next Story
    ×