என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் சேர்மன் ஜனகர் தலைமையில் நடந்த காட்சி.
ஆழ்வார் திருநகரி யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம்
- தென்திருப்பேரை யிலுள்ள ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
- கூட்டத்தில் 40 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தென்திருப்பேரை:
தென்திருப்பேரை யிலுள்ள ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜனகர் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சிவராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் ராஜாத்தி, உறுப்பினர்கள் தானி ராஜ்குமார், மல்லிகா, மாரிமுத்து, தாமஸ், நசரேன், பூல், சஜீதா, காந்திமதி உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 40 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






