search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மற்றும் அங்கன்வாடி கட்டிட பணிக்கு நிதி ஒதுக்கீடு- கீழப்பாவூர் யூனியன் கூட்டத்தில் முடிவு
    X

    கூட்டம் நடைபெற்றபோது எடுத்தபடம்.


    பள்ளி மற்றும் அங்கன்வாடி கட்டிட பணிக்கு நிதி ஒதுக்கீடு- கீழப்பாவூர் யூனியன் கூட்டத்தில் முடிவு

    • கூட்டத்தில் ரூ. 71 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டது.
    • யூனியன் கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

    தென்காசி:

    கீழப்பாவூர் யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம் சேர்மன் காவிரி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆணையாளர் கண்ணன்,மேலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் கீழப்பாவூர் யூனியனுக்கு உட்பட்ட தொடக்கப் பள்ளிகளில் பழுதடைந்த 10 பள்ளி கட்டிடங்களை முதற்கட்டமாக பழுது நீக்குவதற்காக ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.32 லட்சத்து 76 ஆயிரமும், பழுதடைந்துள்ள 18 அங்கன்வாடி மைய கட்டிடங்கள் பழுது நீக்குவதற்கு ரூ.39 லட்சம் என மொத்தம் ரூ. 71 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டது.

    கூட்டத்தில் யூனியன் கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அப்போது கவுன்சிலர் முருகேசன் கூறும் போது, குறும்பலாபேரி கோவில் மைதானம் தற்போது பெய்த மழையால் சேரும் சகதியுமாக உள்ளது. எனவே அதனை உடனடியாக சீர் செய்ய வேண்டும், அனைத்து வார்டுகளிலும் கொசு மருந்து தெளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    அதற்கு பதிலளித்து பேசிய யூனியன் தலைவி காவேரி, இது தொடர்பாக அந்த இடங்களை பார்வையிட்டும் பஞ்சாயத்து மூலம் கொசு மருந்து தெளிக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்றார். கவுன்சிலர் சரவணன் கூறும் பொழுது பூலாங்குளம் பஞ்சாயத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தார். அதற்கு ஆணையாளர் கண்ணன் இதற்கு மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    Next Story
    ×