தமிழகம் முழுவதும் மின் வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் மின் வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.பணிக்கு வராத ஊழியர்களுக்கு இன்று ஒருநாள் சம்பளம் கிடையாது.
தமிழகம் முழுவதும் மின் வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
Published on

சென்னை:

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை பூர்த்தி செய்திட வேண்டும். நீண்ட காலமாக குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்திட வேண்டும், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பணப் பயன்களை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு) சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மின் வாரிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

சென்னையில் அண்ணாசாலையில் உள்ள தலைமை மின் வாரிய அலுவலகத்தில் இந்த போராட்டம் நடைபெற்றது. இதேபோல் தமிழ்நாடு முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இதன் காரணமாக மின்வாரிய பணிகளில் சிறிது பாதிப்பு ஏற்பட்டது. வேலைக்கு வந்திருந்த மற்ற ஊழியர்களை வைத்து பணிகள் நடைபெற்றது.

மேலும் பணிக்கு வராத ஊழியர்களுக்கு இன்று ஒருநாள் சம்பளம் கிடையாது என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com