search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீஞ்சூரில் அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகள் கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    மீஞ்சூரில் அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகள் கண்டன ஆர்ப்பாட்டம்

    • திருச்சபைகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், ரெவரண்ட் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது.
    • 500க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி:

    மணிப்பூர் மாநிலத்தில் இருதரப்பின் இடையே ஏற்பட்ட கலவரத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள், வீடுகள் பள்ளிகள், அடித்து நொறுக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டதை கண்டித்து மீஞ்சூர் பஜார் வீதியில் மீஞ்சூர் வட்டார அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், ரெவரண்ட் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் விடுதலை இயக்க பொதுச்செயலாளர் வினோத் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

    இதில் மீஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் ரோமன் கத்தோலிக், இ.சி.ஐ, சி.எஸ்.ஐ, சர்ச் ஆஃப் காட், ஏஜி, ஏசிஏ, சர்ச் ஆப் கிரைஸ்ட், பெந்தகொஸ்தே திருச்சபை உட்பட 50 திருச்சபைகள் 500க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் உட்பட மீஞ்சூர் பேரூர் தலைவர் ருக்குமணி மோகன்ராஜ் திமுக நகரச் செயலாளர் தமிழ்உதயன், துணைத் தலைவர் அலெக்சாண்டர்,அருட்தந்தை அருளப்பா, போதகர்கள் பால் உதயசூரியன் ஜான் ரமேஷ், நெகமியாஜெபராஜ், ஜான் வில்லியம்ஸ், ஜான் ராய், யாபேஸ், ராபர்ட், மாற்கு, ராஜேஷ், ஆகியோர் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×