search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் ஆலங்குளம் அரசு பள்ளி மாணவன், மாணவி சாதனை
    X

    தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் ஆலங்குளம் அரசு பள்ளி மாணவன், மாணவி சாதனை

    • போட்டியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • பாக்கியவதி,கிஷோர் குமார் ஆகியோர் முதல் இடத்தில் வெற்றி பெற்றனர்.

    ஆலங்குளம்:

    தேசிய அளவில் கேரளா மாநிலம் கொச்சி ராஜுவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் நாடு முழுவதும் இருந்து கலந்து கொண்டனர்.

    இதில் ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியின் 6-ம் வகுப்பு மாணவி பாக்கியவதி மற்றும் 7-ம் வகுப்பு மாணவன் கிஷோர் குமார் ஆகியோர் கலந்து கொண்டு முதல் இடத்தில் வெற்றி பெற்றனர். மேலும் ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி தேசிய அளவில் பெற்ற முதல் பதக்கம் இது ஆகும்.

    Next Story
    ×