

ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் யூனியன் 32 கிராம பஞ்சாயத்துக்களை யும், 23 ஒன்றிய கவுன்சிலர்களையும் உள்ளடக்கியது. இந்த யூனியனுக்கான அலுவலகம் நெல்லை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் ஆலங்குளம் மத்திய பகுதி யில் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராள மான பொதுமக்கள், கட்டிட ஒப்பந்ததாரார்கள் உள்ளிட்டோர் பல்வேறு தேவைகளுக்கு வந்து செல்கின்றனர்.
இதுதவிர மாதந்தோறும் இந்த யூனியன் அலுவல கத்தில் ஊராட்சி செயலர்கள் கூட்டம், கவுன்சிலர்கள் கூட்டம், பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டம் நடைபெற்று வரு கிறது. அவ்வாறு வருபவர்களுக்கு கழிவறை வசதிகள் இல்லை என்று புகார்கள் வந்துள்ளது.
யூனியன் அலுவலக வளாகத்தில் அங்கு பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு மட்டுமே கழிவறை உள்ளது. பொதுமக்கள் உள்ளிட்டோ ருக்கு பொதுவான கழிப்பறைகள் எதுவும் இல்லை.
இதனால் பெண்கள், வயதானவர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்ற னர் என்று சமூக ஆர்வ லர்கள் புகார் கூறுகின்றனர்.
மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் கோரிக்கை விடுத்தாலும், அதனை அவர்கள் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் அதி ருப்தி தெரிவிக்கின்றனர்.