search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயிரில் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் அதிகாரி விளக்கம்
    X

    புகையான் தாக்கிய வயலை வேளாண் அதிகாரி ஆய்வு.

    பயிரில் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் அதிகாரி விளக்கம்

    • 8 அடிக்கு 1 அடி இடைவெளி விட்டு பாத்தி நடவு செய்ய வேண்டும்.
    • விளக்கு பொறி அமைத்து தாய்ப்பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணித்து அழிக்கலாம்.

    சீர்காழி:

    சீர்காழி வட்டாரம் அகணி கிராமத்தில் புகையன் தாக்கிய வயலை பார்வையிட்டு சீர்காழி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராஜராஜன் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் புகையான் தாக்குதலில் இருந்து நெற்பயிரை காப்பாற்றும் வழிமுறை குறித்து விளக்கமளித்துள்ளார்.

    தற்பொழுது சீர்காழி வட்டாரத்தில் இரவில் வெப்ப நிலை குறைவாகவும், பகலில் மந்தமான சூரிய வெளிச்சம் இருப்பதினாலும் சம்பா, தாளடி நெற்பயிரில் பரவலாக புகையான் பூச்சி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

    பூச்சிகள் வேர்களின் அடிப்பாகத்தில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால் பயிர் மஞ்சள் நிறமாக மாறும் பின்னர் பழுப்பு நிறமாக மாறும்.

    பாதிக்கப்பட்ட வயல் ஆங்காங்கே வட்ட வட்டமாக புகைந்தது போல காணப்படுவது தாக்குதலின் அறிகுறியாகும். இதனை கட்டுப்படுத்த நடவு வயலில் 8 அடிக்கு 1 அடி இடைவெளி விட்டு பாத்தி நடவு செய்ய வேண்டும்.

    மண் பரிசோதனை பரிந்துரைப்படி தழைச்சத்து இடும்பொழுது 3 – 4 முறையாக பிரித்து இடவேண்டும்.

    களை செடிகளை அகற்றி விடவேண்டும்.புகையான் பூச்சி தாக்குதலுக்கு எதிர்ப்பு திறன், தாங்கும் திறன் கொண்ட ரகங்களை பயிரிடலாம்.

    விளக்குப் பொறி அமைத்து தாய்ப்பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்கா ணித்து அழிக்கலாம்.

    மஞ்சள் நிற ஒட்டுப்பொறிகளை ஹெக்டேருக்கு 12 என்ற அளவில் அமைக்கலாம். வயலில் புகையானின் இயற்கை விரோதிகளான சிலந்தி, பச்சை மிரிட் நாவாய்ப் பூச்சி, புள்ளி வண்டு, தட்டான், ஊசித் தட்டான் போன்ற இரை விழுங்கிகளும், அனேக்ரஸ், ஒலிகோசிட்டா போன்ற முட்டை ஒட்டுண்ணிகளும் இப்பூச்சியைப் பெரும் அளவில் கட்டுப்படு த்துகின்றன. பொருளாதார சேத நிலையை எட்டியவுடன் கீழ்க்கண்ட பூச்சிக் கொல்லிகளுள் ஏதேனும் ஒன்றை ஒரு ஹெக்டேருக்கு தெளிக்க வேண்டும்.

    குளோரன்டிரினிலிப்ரோல் 18.5 எஸ்சி – 150 மி.லி. அல்லது இமிடாகுளோபிரிட் 17.8 எஸ் எல் – 100 மி.லி. அல்லது ப்யூப்ரோபெசின் 25 எஸ்சி 652 மி.லி. புகையானின் மறு உற்பத்தியை பெருக்கும் மீதைல்பாரத்தியான் மற்றும் செயற்கை பைரித்ராய்டு மருந்துகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார்.

    Next Story
    ×