search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசியில் பா.ஜ.க. சார்பில் ஆலோசனை கூட்டம்
    X

    ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜ.க.வினர்.

    தென்காசியில் பா.ஜ.க. சார்பில் ஆலோசனை கூட்டம்

    • பா.ஜனதாவின் நிர்வாகிகள் பங்கேற்ற சிறப்பு ஆலோசனைக் கூட்டம் தென்காசியில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தென்காசி:

    தென்காசியில் பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா தலைமையில் தென்காசி மாவட்ட பா.ஜனதாவின் அணி பிரிவு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டல் நிர்வாகிகள் பங்கேற்ற சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட பொதுச் செயலாளர்கள் பாலகுருநாதன்,அருள் செல்வன், ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொரு ளாளர் பாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகவும், கோட்ட அமைப்பு பொதுச்செயலாளர் கிருஷ்ணன், தென்காசி மாவட்ட பா.ஜனதா கட்சி பார்வையாளர் மகாராஜன், வர்த்தக பிரிவு மாநில செயலாளர் கோதை மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஜனவரி மாதம் பாரதீய ஜனதா கட்சியின் அணி பிரிவுகள் சார்பில் தென்காசியில் மாபெரும் மாநாடு நடத்துவது என்றும், பொதுமக்கள் நலன் சார்ந்த விஷயங்களையும், பாதிக்க ப்படும் விஷயங்களையும் முன்னெடுத்து போராட்டம் நடத்துவது, மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பூத்களிலும் உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்துவது, பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தென்காசி நகர தலைவர் மந்திரமூர்த்தி வரவேற்று பேசினார். இதில் மாவட்ட துணைத் தலைவர்கள் முத்துலட்சுமி, முத்துக்குமார், பால்ராஜ், மாவட்ட செயலாளர்கள் சுப்பிர மணியன், அர்ஜுனன், புலிக்குட்டி,ராஜலட்சுமி மற்றும் மாவட்ட அணி பிரிவு தலைவர்கள், நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×