search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    40 காசு மைனஸ் விலைக்கு மட்டுமே முட்டைகளை விற்க பண்ணையாளர்களுக்கு அறிவுரை
    X

    40 காசு மைனஸ் விலைக்கு மட்டுமே முட்டைகளை விற்க பண்ணையாளர்களுக்கு அறிவுரை

    • சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 1100 பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள் மூலம் தினமும் 4.5 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது.
    • நெஸ்பேக் அறிவிக்கும் மைனஸ் விலைக்கு மேல் விற்க வேண்டாம் என தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

    நாமக்கல்:

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 1100 பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள் மூலம் தினமும் 4.5 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டை, தமிழக சத்துணவு திட்டம், உள்ளூர், கேரளா மற்றும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு, முட்டை கொள்முதல் விலையை வாரத்தில் ஞாயிறு, புதன், வெள்ளி ஆகிய 3 நாட்களுக்கு நிர்ணயம் செய்கிறது. அதேபோல் நாமக்கல் முட்டை விலை நிர்ணய ஆலோசனை குழு கொள்முதல் விலையிலிருந்து குறைத்து விற்பனை செய்ய பண்ணையாளர்களுக்கு பரிந்துரை செய்கிறது.

    அவற்றில் இருந்து மேலும் குறைத்து விற்பனை செய்ய வேண்டாம் என பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    இந்த நிலையில் நெஸ்பேக் அறிவிக்கும் மைனஸ் விலைக்கு மேல் விற்க வேண்டாம் என தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:-

    பார்வாலா உள்பட வட மாநிலங்களில், அனைத்து மண்டலங்களிலும் முட்டை விலை உயர்ந்து வருகிறது. நாமக்கல் மண்டலத்தில் பெரும்பாலான பண்ணைகளில் முட்டை இருப்பு இல்லை. இதனால் நெஸ்பேக் அறிவிக்கும் மைனஸ் 40 காசுக்கு மேல் யாரும் முட்டையை விற்க வேண்டாம். வரும் 7-ந் தேதி கார்த்திகை தீபம் திருநாளுக்கு பிறகு முட்டை விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அவற்றை கருத்தில் கொண்டு பண்ணையாளர்கள் ஒருமித்த கருத்தோடு நெஸ் பேக் அறிவிக்கும் விலைக்கு மட்டுமே முட்டை விற்பனை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×