search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும்- கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பேச்சு
    X

    கூட்டத்தில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பேசியபோது எடுத்த படம்.

    ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும்- கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பேச்சு

    • குளத்தூர் பேருந்து நிலையம் முன்பு முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன் தலைமையில் பொதுக்கூட்டம் நடை பெற்றது.
    • 50-க்கும் மேற்பட்டோர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூரில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு குளத்தூர் பேருந்து நிலையம் முன்பு முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன் தலைமையில் பொதுக்கூட்டம் நடை பெற்றது.

    பொதுக்கூட்டத்தில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசுகையில், ஒரு தொண்டன் கூட முதல்-அமைச்சராக முடியும் என ஒரு இயக்கம் உண்டு என்றால் அது அ.தி.மு.க.தான்.

    ஈரோடு கிழக்குத் தொகுதி எடுத்துக் கொண்டால் முதல் முதலில் போட்டியிட போவதாக அறிவித்த கட்சி அ.தி.மு.க.தான். இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும் என்றார்.

    நிகழ்ச்சியின் முடிவில் மாற்றுக்கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    நிகழ்ச்சியில் எட்டயபுரம் நகர செயலாளர் ராஜ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. என்.கே.பெரு மாள், விளாத்திகுளம் ஒன்றிய தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன், புதூர் ஒன்றிய தலைவர் சுசிலா தனஞ்ஜெயன், ஒன்றிய செயலாளர்கள் விளாத்திகுளம் மேற்கு ஒன்றியம் மகேஷ், கிழக்கு ஒன்றியம் பால்ராஜ், புதூர் மேற்கு ஒன்றியம் தனவதி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இலக்கிய அணி பேச்சாளர் இளங்கோ, மகளிர் அணி சாந்தி, வார்டு கவுன்சிலர் பிரியா, குளத்தூர் கிளைக் செயலாளர்கள் வேல் மயில், செல்லையா, சந்திரசேகரன், ஜோதிமணி உட்பட 300- க்கும் மேற்பட்ட அ.தி.மு.க தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×