search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடலூர் அருகே அ.தி.மு.க.வினா் ஆா்ப்பாட்டம்
    X

    "கூடலூர் அருகே அ.தி.மு.க.வினா் ஆா்ப்பாட்டம்

    • தாா் கலவை தொழிற்சாலையை அகற்றக்கோரி போராட்டம் நடந்தது.
    • நச்சுப் புகையால் அப்பகுதி மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

    ஊட்டி,

    தேவாலா பஜாரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கூடலூா் சட்டப்பேரவை உறுப்பினா் பொன்.ஜெயசீலன் தலைமை வகித்தாா்.

    இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது: கூடலூா் வட்டம், தேவாலா, போக்கா் காலனியில் தாா் கலவை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையிலிருந்து வெளியேறும்

    நச்சுப் புகையால் அப்பகுதி மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, இந்த ஆலையை இப்பகுதியிலிருந்து அகற்ற வேண்டும் என்றனா்.

    இந்த ஆா்ப்பாட்டத்தில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்."

    Next Story
    ×