search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீன்பிடித் துறைமுகம் அமைக்க கோரி அ.தி.மு.க. சார்பில் மரக்காணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ஏராளமானோர் பங்கேற்பு
    X

    மரக்காணத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மீன்பிடித் துறைமுகம் அமைக்க கோரி அ.தி.மு.க. சார்பில் மரக்காணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ஏராளமானோர் பங்கேற்பு

    • தி.மு.க. அரசை கண்டித்து, மரக்காணத்தில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
    • பல்வேறு பகுதிகளில் இருந்து அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்ட எல்லையில் அழகன்குப்பம் பக்கிங்காம் கால்வாயில் ஆலம்பராகோட்டை அருகில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க வலியுறுத்தியும், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை ரத்து செய்த தி.மு.க. அரசை கண்டித்தும், மரக்காணத்தில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெறும் என முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

    அதன்படி மரக்காணம் பழைய பஸ் நிலையம் அருகில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பகுதிகளில் இருந்து அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பபட்டது.

    Next Story
    ×