search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பழங்குடியினர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கை : கலெக்டர் தகவல்
    X

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பழங்குடியினர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கை : கலெக்டர் தகவல்

    • 2023-2024 ஆம் ஆண்டிற்கான விடுதி சேர்க்கை நடைபெறுகிறது.
    • மாணவர்கள் நேரடியாகவோ அல்லது காப்பாளர் உதவியுடனோ 30-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் சங்கராபுரம் மாணவர் விடுதி, புதுப்பட்டு மாணவர் விடுதி மற்றும் சங்கராபுரம் தொழிற்பயிற்சி மாணவர் விடுதி ஆகியவற்றில் 2023-2024 ஆம் ஆண்டிற்கான விடுதி சேர்க்கை நடைபெறுகிறது. மேலும், இந்த விடுதிகளில் மாணவர்கள் தங்கி பயில்வதற்கு விடுதி மேலாண்மை செயலியின் மூலம் மாணவர்கள் நேரடியாகவோ அல்லது காப்பாளர் உதவியுடனோ 30-ந்தேதி வரை விண்ண ப்பித்து மாணவர்கள் விடுதியில் தங்கி பயின்று பயன்பெறலாம் இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×