search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடிப்பெருக்கு : திண்டுக்கல் கோட்டை குளத்தில் பெண்கள் வழிபாடு
    X

    திண்டுக்கல் கோட்டை குளத்தில் பெண்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.

    ஆடிப்பெருக்கு : திண்டுக்கல் கோட்டை குளத்தில் பெண்கள் வழிபாடு

    • ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன.
    • சுமங்கலி பெண்கள் தங்கள் மஞ்சள் கயிறை மாற்றி புதிய கயிறை மாற்றிக்கொண்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் வெக்காளி யம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு நாளன்று பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி இன்று காலை பூக்குழி இறங்குவதற்காக பூமேடை தயார்படுத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

    கோவில் பூசாரி முதலில் பூக்குழி இறங்கிய பின் பக்தர்கள் ஒவ்வொருவராக பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தீச்சட்டி எடுத்தபடியும், அலகு குத்திய படியும், குழந்தைகளை சுமந்தவாறும் பக்தர்கள் பூக்குழி இறங்கிய காட்சி பக்தர்களை பரவச ப்படுத்தியது. இதேபோல் திண்டுக்கல் கோட்டை மாரியம்ம ன்கோவில், அபிராமி அம்மன் கோவில், புவனே ஸ்வரி அம்மன் உள்ளிட்ட கோவில்களிலும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன.

    அதிகாலை முதல் ஏராள மான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திண்டுக்கல் கோட்டை குளத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பெண்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். சுமங்கலி பெண்கள் தங்கள் மஞ்சள் கயிறை மாற்றி புதிய கயிறை மாற்றிக்கொண்டனர்.

    Next Story
    ×