வேதாரண்யம் கோவிலில் ஆதீனங்கள் சாமி தரிசனம்

இரு மடாதிபதிகளுக்கும் பூரணகும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. அகஸ்தியர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆதீனங்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆதீனங்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு தருமபுர ஆதீனம் மற்றும் மதுரை ஆதீனம் ஆகியோர் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோவில் சார்பில் இரு மடாதிபதிகளுக்கும் பூரணகும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் யாழ்ப்பாணம் கருண வாய்வரனி ஆதீனம் இளையவர் சபேசன், கோவில் நிர்வாக அலு வலர் அறிவழகன், தலத்தார் கயிலைமணி வேதரத்தினம் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

பின், அகஸ்தியர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். வேதாரண்யம் தெற்கு வீதியில் புதிதாக தருமபுர ஆதீன கட்டளை மடம் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com