search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திசையன்விளை அருகே குமாரபுரம் ஊராட்சி பள்ளிக்கு கூடுதல் கட்டிடம்  - வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் அடிக்கல் நாட்டினார்
    X

    வகுப்பறை கூடுதல் கட்டிடத்திற்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் அடிக்கல் நாட்டியபோது எடுத்த படம்.

    திசையன்விளை அருகே குமாரபுரம் ஊராட்சி பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் - வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் அடிக்கல் நாட்டினார்

    • குமாரபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.29 லட்சத்தில் கட்டப்பட உள்ள கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
    • மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார்.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள குமாரபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு நிதி மூலம் ரூ.29 லட்சத்தில் கட்டப்பட உள்ள கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார்.

    ராதாபுரம் யூனியன் ஆணையாளர் விமலா பிளாரன்ஸ், குமார புரம் பஞ்சாயத்து துணைத் தலைவர் அனிஷா பயாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமாரபுரம் பஞ்சாயத்து தலைவர் அனிதா பிரின்ஸ் வரவேற்று பேசினார். விழாவில் பஞ்சாயத்து கவுன்சிலர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    Next Story
    ×