கடையநல்லூர் அடவிநயினார் அணை நிரம்பியது

காற்றின் வேகத்தில் இன்று அணையில் உள்ள நீர் வழிய தொடங்கி உள்ளது. அந்த அணை இன்று காலை 131.50 அடியை எட்டியது.
அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் காட்சி.
அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் காட்சி.
Published on

கடையநல்லூர்:

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள மேக்கரை பகுதியில் அனுமன் நதியின் குறுக்கே 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கன மழையால் 132 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணை இன்று காலை 131.50 அடியை எட்டியது. காற்றின் வேகத்தில் இன்று அணையில் உள்ள நீர் வழிய தொடங்கி உள்ளது. அணைக்கு சுமார் 30 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 5 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இன்று இரவுக்குள் முழுமையாக நிரம்பி வழிய தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com