search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி தெப்பக்குளத்தில் நீருற்று , நவீன வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை - மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்
    X

    மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்த காட்சி.

    தூத்துக்குடி தெப்பக்குளத்தில் நீருற்று , நவீன வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை - மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

    • தூத்துக்குடி மாநகரில் உள்ள தெப்பக்குளத்தை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்.
    • இந்த குளத்தின் கரையை சுற்றிலும் பேவர் பிளாக்கற்களும், வண்ண விளக்குகளும், இருக்கைகளும் அமைக்கப்படும் என்று மேயர் கூறினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகரில் உள்ள தெப்பக்குளத்தை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார். இந்த கோடையிலும் நீர் நிறைந்து காணப்பட்டாலும், சுகாதாரமாக இல்லாமல் இருப்பதாகவும் மீன்கள் அடிக்கடி இறந்து மிதப்பதாகவும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கூறினர்.

    அப்பொழுது அவர்க ளிடம் இந்த குளத்தின் கரையை சுற்றிலும் பேவர் பிளாக் கற்களும், வண்ண விளக்கு களும், இருக்கை களும் அமைக்கப்படும். குளத்தின் நீரை சுத்தப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை மீன்வளக் கல்லூரியின் மூலம் என்ன செய்யலாம் என்று கேட்டு குளத்தின் நடுவிலோ அல்லது ஓரத்திலோ செயற்கை நீருற்று மற்றும் மினி ஹைமாஸ் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார்.

    அப்போது தி.மு.க. பகுதி செயலாளரும், மாநகர கவுன்சிலருமான சுரேஷ்குமார், மாநகர துணை செயலாளர் கவுன்சி லர் கீதா முருகேசன், கவுன்சி லர் முத்துவேல், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், பகுதி செயலாளர் ரவீந்திரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×