திண்டிவனம் நகராட்சி பகுதியில் அனுமதி இன்றி பேனர் வைத்தால் நடவடிக்கை

திண்டிவனம் நேரு வீதி, செஞ்சி ரோடு காந்தி சிலை ஆகிய இடங்களில் உள்ள விளம்பர பதாகை அகற்றும் பணி நடந்தது. நகராட்சி குப்பை அள்ளும் வாகனங்களில் எடுத்துச்சென்றனர்.
திண்டிவனம் நகர் பகுதியில்  பேனர்களை போலீசார் அகற்றிய காட்சி. 
திண்டிவனம் நகர் பகுதியில் பேனர்களை போலீசார் அகற்றிய காட்சி. 
Published on

விழுப்புரம்:

திண்டிவனம் ஏ.எஸ். பி. அபிஷேக் குப்தா மேற்பார்வையில் திண்டிவனம் நகராட்சி யில்,சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள விளம்பர பதாகைகள் மற்றும் திண்டிவனம் நேரு வீதி செஞ்சி ரோடு காந்தி சிலை ஆகிய இடங்களில் உள்ள விளம்பர பதாகை அகற்றும் பணி, நடந்தது. நேற்று மாலை, தொடங்கி இரவு, வரை நீடித்தது.

இதில் டவுன் போலீஸ் சப்- இன்ஸ்பெக்ட ர்ஆனந்தராசன் நகராட்சி பணியாளர்கள் பதாகைகளை அகற்றி, நகராட்சி குப்பை அள்ளும் வாகனங்களில் எடுத்துச்சென்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில் அனுமதியின்றி விளம்பரம் பதாகைகள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com