search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் விரைவில் கல்குவாரிகளை திறக்க நடவடிக்கை- அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி
    X

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் விரைவில் கல்குவாரிகளை திறக்க நடவடிக்கை- அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி

    • நெல்லை மாவட்டத்தில் சுமார் 7 வாரங்களாக கல்குவாரிகள் மூடப்பட்டு உள்ளது.
    • விரைவில் அனைத்து குவாரிகளையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான அறிக்கைகள் அனைத்தும் அரசின் ஆய்வில் உள்ளது

    நெல்லை:

    நெல்லையில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சரின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்ததில் பெருமை அடைகிறேன். தகுதியும் திறமையும் உள்ள அனைவரும் நல்ல2 நிலையை அடைய முடியும்.

    கல்விக்கு தமிழகம் தான் அதிக முக்கியத்துவத்தை கொடுக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி காலத்தில் தான் கல்வித்துறைக்கு அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தற்போது தமிழகம்தான் உயர்கல்வியில் முதலிடத்தில் உள்ளது. கொரோனா பாதிப்பு சென்னை உள்பட 3 மாவட்டங்களில் சற்று அதிகரித்துள்ளது. எனினும் அதனை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது. துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நெல்லை மாவட்டத்தில் சுமார் 7 வாரங்களாக கல்குவாரிகள் மூடப்பட்டு உள்ளது. ஆனாலும் இதுவரை கல் குவாரியை திறக்க நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கல்குவாரியை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் உள்ளனர் என்பது மறுக்க முடியாதது.

    விரைவில் அனைத்து குவாரிகளையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான அறிக்கைகள் அனைத்தும் அரசின் ஆய்வில் உள்ளது. விரைவில் குவாரிகள் திறக்கப்படும்.

    3 சதவீதம் வரையிலான குவாரிகள் சட்டவிரோதமானவையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றின் உரிமம் ரத்து செய்யப்படும். அனைத்து குவாரிகளையும் மூட வேண்டும் என்பது அரசினுடைய நோக்கம் அல்ல என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

    Next Story
    ×