search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரம் அருகே அதிரடி: லாரியில் கடத்திய ரூ. 15 லட்சம்  மது பாட்டில்கள் பறிமுதல்
    X

    விழுப்புரம் அருகே அதிரடி: லாரியில் கடத்திய ரூ. 15 லட்சம் மது பாட்டில்கள் பறிமுதல்

    • விழுப்புரம் அருகே லாரியில் கடத்திய ரூ. 15 லட்சம் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • கெங்கிராம்பாளையம் மதுவிலக்கு சோதனை சாவடியில் மதுவிலக்கு போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    புதுவை மாநிலத்திலிருந்து விழுப்புரம், கடலூர் , காஞ்சிபுரத்திற்கு மது பாட்டில்கள் கடத்தல் உள்ளிட்டவை ஏராளமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பதவி ஏற்றதில் இருந்து மது, போதை பொருள்கள் கடத்தல் விற்பனை உள்ளிட்டவைகளை அடியோடு ஒடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை புதுவையில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் வளவனூர் கெங்கிராம்பாளையம் மதுவிலக்கு சோதனை சாவடியில் மதுவிலக்கு போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை போலீசார் நிறுத்த முயற்சித்த போது நிற்காமல் வேகமாக சென்றது. உடனே மதுவிலக போலீசார் சினிமா பாணியில் லாரியை துரத்தி சென்றனர். அப்போது குடுமியான்குப்பம் பகுதி அருகே லாரியை நிறுத்திவிட்டு 2 பேர் பேரும் தப்பித்து சென்றனர்.

    லாரியின் பின்னால் துரத்தி சென்ற போலீசார் சென்று பார்த்தபோது லாரி மட்டும் பள்ளத்தில் இருந்தது. உடனே மதுவிலக்கு போலீசார் சோதனை செய்ததில் லாரியின் உள்ளே நூதன முறையில் 155 அட்டைப்பெட்டியில் புதுவை மது பாட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட போலி மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. உடனே இது குறித்து தகவல் அறிந்த வளவனூர் போலீசார் மற்றும் விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் விழுப்புரம் மதுவிலக்கு போலீசாரிடம் லாரியுடன் போலி மதுபான பாட்டிலும் பறிமுதல் செய்து ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து இதை கடத்தி வந்த நபர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×