நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு நடந்தால் நடவடிக்கை

குறை தீர்வு கூட்டங்கள் மாதத்தில் முதல் வாரத்தில் வட்ட அளவிலும், 2-வது வாரம் கோட்ட அளவிலும், 3-வது வாரம் மாவட்ட அளவிலும் நடைபெறும் பல்வேறு துறை அதிகாரிகள், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு நடந்தால் நடவடிக்கை
Published on

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், வேளாண்மை துறை இணை இயக்குனர் வடமலை உள்பட அதிகாரிகள் பலர் முன்னிலை முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு ,விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் குறித்த நேரத்தில் நடத்த வேண்டும்,நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடுகள் நடைபெறுகிறது,நெல் பயிர் செய்யாத, விவசாயி அல்லாதவர்கள் நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொண்டு வந்து விற்பனை செய்து ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விலை பட்டியல் இருப்பது போன்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் விலை பட்டியல் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அந்தந்த பகுதி விவசாயிகளுடன் கலந்து ஆலோசித்து தான் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

குறை தீர்வு கூட்டங்கள் மாதத்தில் முதல் வாரத்தில் வட்ட அளவிலும், இரண்டாவது வாரம் கோட்ட அளவிலும், மூன்றாவது வாரம் மாவட்ட அளவிலும் நடைபெறும், விவசாயிகளின் கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடுகள் இருந்தால் திடீர் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

கூட்டத்தில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை உள்பட பல்வேறு துறை அதிகாரிகள், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com