search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் செயல்படும் மகளிர் விடுதிகள் மீது நடவடிக்கை - கலெக்டர் ஆகாஷ் எச்சரிக்கை
    X

    கலெக்டர் ஆகாஷ்


    தென்காசி மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் செயல்படும் மகளிர் விடுதிகள் மீது நடவடிக்கை - கலெக்டர் ஆகாஷ் எச்சரிக்கை

    • உரிமம் இல்லாமல் செயல்படும் மகளிர் விடுதி, குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கும் இல்லம் இயங்க அனுமதி இல்லை
    • கண்காணிப்பு குழுக்களின் மூலம் நடத்தப்படும் தொடர் ஆய்வின் மூலம் குறைகள் கண்டறியும் பட்சத்தில் விடுதிகள் மற்றும் இல்லங்களின் மேல் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்கு–றிப்பில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பணிபுரியும் மகளிர் விடுதிகள், குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கும் இடங்கள், தமிழக அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் முறைப்படுத்துதல் சட்டம் 2014-ன் கீழ் மாவட்ட கலெக்டர் அவர்களின் மூலம் உரிமம் பெற்று செயல்படவேண்டும். உரிமம் இல்லாமல் செயல்படும் மகளிர் விடுதி, குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கும் இல்லம் இயங்க அனுமதி இல்லை.

    எனவே உரிய சான்றுகளுடன் பதிவு செய்தல், புதுப்பித்தல் போன்றவற்றை தனியார் விடுதிகள், இல்லங்களை நடத்திவரும் அனைத்து நிர்வாகிகளும் கூடிய விரைவில் முடித்திட வேண்டும். மேலும் விடுதியில் போதிய பாதுகாப்பு வழங்குதல் மற்றும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். கண்காணிப்பு குழுக்களின் மூலம் நடத்தப்படும் தொடர் ஆய்வின் மூலம் குறைகள் கண்டறியும் பட்சத்தில் விடுதிகள் மற்றும் இல்லங்களின் மேல் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    Next Story
    ×