search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளம் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    விளாத்திகுளம் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • விவேகானந்தா வித்தியாலயா மழலையர் பள்ளியில் “விபத்தில்லா தீபாவளி” விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாணவர்களுக்கு பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிப்பது பற்றி அறிவுரை வழங்கப் பட்டது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளத்தில் உள்ள விவேகானந்தா வித்தியாலயா மழலையர் பள்ளியில் விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில், "விபத்தில்லா தீபாவளி" விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு தீபாவளி தினத்தன்று பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிப்பது பற்றியும், பட்டாசுகள் வெடிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை அறிவுரைகள் வழங்கப் பட்டது. அதுமட்டுமின்றி, எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டால் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றியும், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு போன் செய்து தெரிவிக்கவேண்டும் என்றும் கூறப்பட்டது. இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×