search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பன்றிகள் குறுக்கே பாய்ந்ததால் விபத்து: மோட்டார் சைக்கிளில்  சென்ற 2  விவசாயிகள் பலி
    X

    பன்றிகள் குறுக்கே பாய்ந்ததால் விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற 2 விவசாயிகள் பலி

    • பன்றிகள் குறுக்கே பாய்ந்ததால் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 விவசாயிகள் பலியானார்கள்.
    • இளவரசன் பலத்த காயம் ஏற்பட்டு வேதனையால் அலறி துடித்தார்.

    விழுப்புரம் ஆக.10-

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா எனதரிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 45) பட்டு ரோசா (45). வளவனூர் அருகே சின்ன குச்சிபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இளவரசன் (38) இவர்கள் 3 பேரும் விவசாய பணியாளர்கள். இவர்கள் 3 பேரும் புதுவை மாநிலம் பகண்டை பகுதியில் கரும்பு வெட்டுவதற்காக ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.புதுவை அருகே வளவனூர் காவல் எல்லைக்குட்பட்ட கூட்ரோ டு பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்றது. அப்போது கூட்ரோடு அருகே சாலையின் குறுக்கே பன்றி களின் கூட்டம் சென்றது. இதை சிறிதும் எதிர்பாராத மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி வந்த ராமமூர்த்தி கண்ணிமைக்கும் நேரத்தில் பன்றிகள் மீது மோதினார். இதில் மூவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். இந்த விபத்தில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே ராமமூர்த்தி, பட்டுரோஜா ஆகியோர் இறந்தனர். இளவரசன் பலத்த காயம் ஏற்பட்டு வேதனையால் அலறி துடித்தார்.

    இதனை அக்கம் பக்கம் உள்ளவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து இது குறித்து வளவனூர் போலீஸ் நிலைய த்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி (பொறுப்பு) தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குவிரைந்து சென்று படுகாயம் அடை ந்த இளவரசனை மீட்டு விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கம் அரசு கலைக் கல்லூரியில் ஆஸ்ப த்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். உயிரிழந்த ராமமூர்த்தி, பட்டு ரோஜா ஆகியோர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×