search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடிதடி வழக்குகளில் கைதாகி ஜாமீனில் வந்த தலைமறைவு குற்றவாளிகள் கைது
    X

    அடிதடி வழக்குகளில் கைதாகி ஜாமீனில் வந்த தலைமறைவு குற்றவாளிகள் கைது

    • அடிதடி வழக்குகளில் கைதாகி ஜாமீனில் வந்த தலைமறைவு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
    • இவர்களை கைது செய்து நீதிமன்றத்தில்ஆஜர் படுத்த வேண்டும் என வாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் காட்டாண்டிக்குப்பம் பூவராகவமூர் த்தி(35),மாளிகம்பட்டு மணிகண்டன். இவர்கள் அடிதடி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.இவர்கள்மீதானவழக்குவிசாரணை பண்ருட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.இவர்கள் வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தனர்.

    இதனை தொடர்ந்து இவர்களை கைது செய்து நீதிமன்றத்தில்ஆஜர் படுத்த வேண்டும் என வாரண்டு பிறப்பிக்கப்பட்டது.கடலூர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் பண்ருட்டி டி.எஸ்.பி.சபியுல்லா, காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன்ஆகியோர் இவர்களை கைது செய்து பிடியானை நிறைவேற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×