search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழப்பாவூர்  கிருஷ்ணன் கோவிலில் ஆடிப்பூரம் விழா
    X

    கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் ஆடிப்பூரம் விழா

    • அம்பாளுக்கு வளைகாப்பு நடத்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
    • அம்மனுக்கு அணியப் பட்டிருந்த வளையல்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.

    தென்காசி:

    கீழப்பாவூர் ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணசுவாமி திருக்கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.இதில் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் வாங்கி கொடுக்கப்பட்ட வளையல்களால் அம்பாளுக்கு வளைகாப்பு நடத்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் பக்தர்கள் தங்கள் வீடுகளிலிருந்து வளையல்கள் கொண்டு வந்து அம்மனுக்கு மாலையாக அணிவித்தனர். அம்மனுக்கு அணியப் பட்டிருந்த வளையல்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. அம்பாளுக்கு சாத்திய வளையல்கள் பெற்று செல்பவர்கள் வீடுகளில் அனைத்து மங்கள காரியங்களும் நடக்கும் என்பது நம்பிக்கை. இந்த ஆடிப்பூர விழாவில் கிழப்பாவூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×