search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழா
    X

    மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழா

    • வைரக்கற்கள் பதிக்கப்பட்ட சிறப்பு அலங்காரத்தில் முருகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
    • ஆடிக் கிருத்திகையை முன் னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    வடவள்ளி:

    ஆடி மாதத்தில் வரும் ஆடி கிருத்திகை முருகன் கோவில் களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன் படி முருகனின் 7-வது படை வீடு என பக்தர்களால் கொண்டாடப்படும் மருதமலை சுப்பிர மணியசுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழா நாளை (சனிக்கிழமை) நடை பெறுகிறது.

    அதிகாலை 6 மணிக்கு கோ பூஜை. 6.30 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பன்னீர், ஜவ்வாது, சந்தனம் போன்ற 16 வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெறு கிறது.

    அதைத்தொடர்ந்து வைரக்கற்கள் பதிக்கப்பட்ட சிறப்பு அலங்காரத்தில் முருகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இதைய டுத்து உஷகால பூஜை, மகா தீபாராதனை, காலை 9 மணிக்கு கால சந்தி பூஜை நடக்கிறது.

    ஆடிகிருத்திகை என்பதால் பக்தர்கள் பால்குடம், பால் காவடி எடுத்து மலைப்பாதை வழியாக சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்ப தால் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய் யப்பட்டு உள்ளன. 12 மணிக்கு பக்தர்கள் கொண்டு வந்த பால்குடங்க ளால் ஆதி மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணியசுவாமி, வள்ளி- தெய்வானைக்கு அபி ஷேகம் நடைபெறுகிறது.

    உச்சிக்கால பூஜையை தொடர்ந்து முருக பெருமான் வள்ளி தெய்வானையுடன் கோவில் முன்புற மண்டபத்தில் வெள் ளிமயில் வாகனத்தில் எழுந்த ருளி கோவிலை சுற்றி வீதி உலா வருகின்றனர்.

    மாலை 4 மணி அளவில் மீண்டும் மூலவருக்கு சிறப்பு பாலாபிஷேகம், 5 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் முருகப்பெருமான் வள்ளி -தெய்வானை சமேதராக வீதி உலா, 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, மகா தீபாராதனை, மாலை 6 மணிக்கு தங்கரதத்தில் சுவாமி எழுந்தருளல், இரவு 7 மணிக்கு ராக்கால அபிஷேகம், பூஜை, தீபாரா தனை நடைபெறுகிறது.

    ஆடிக் கிருத்திகையை முன் னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×