என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை பகிர்மான வட்டத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு 6 லட்சத்தை தாண்டியது
- இன்று காலை வரை சிறப்பு முகாம்கள் மூலமாகவும், இணைய வழி மூலமாகவும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்த மொத்த மின் நுகர்வோர்களின் எண்ணிக்கை 6,02,689 ஆகும்
- வருகிற 31-தேதிக்குள் 100 சதவீதம் ஆதார் இணைக்க அதிகாரிகள் தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்
நெல்லை:
நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நெல்லை, தென்காசி மாவட்டத்தில் வீட்டு மின் நுகர்வோர்கள் எண்ணிக்கை 10,57,163 , கைத்தறி மின் நுகர்வோர்கள் எண்ணிக்கை 862, விசைத்தறி மின் நுகர்வோர்கள் எண்ணிக்கை 2090, விவசாய மின் நுகர்வோர்களின் எண்ணிக்கை 89480, குடிசை மின் நுகர்வோர்களின் எண்ணிக்கை 7867 என மொத்தம் 11,57,465 உள்ளது.
இதில் இன்று காலை வரை சிறப்பு முகாம்கள் மூலமாகவும், இணைய வழி மூலமாகவும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்த மொத்த மின் நுகர்வோர்களின் எண்ணிக்கை 6,02,689 ஆகும். இது சுமார் 52.05 சதவீதம்.
வருகிற 31-தேதிக்குள் 100 சதவீதம் ஆதார் இணைக்க அதிகாரிகள் தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து பழைய பேட்டை பிரிவு அலுவலகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாமை உதவி மின் பொறியாளர் அருணன் ஆய்வு செய்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்