

தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் பல்வேறு இடங்களில் கள்ள சாராயம் விருப்பதாக மயிலாடுதுறை மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்ததை முன்னிட்டு பல்வேறு இடங்களில் வாகன சோதனைகள் நடத்தப்பட்டன.
அப்போது ராஜாத் தெரு, திருவிழந்தூர் பல்லவராயன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் மகன் விமல்ராஜ் (வயது 20). இவர் காரைக்காலிருந்து பாக்கெட் சாராயத்தை கடத்திவந்து பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையிலான அன்பரசன் உள்ளிட்ட போலீசார் சாராயம் விற்பனை செய்து வந்த விமல்ராஜை கைது செய்து சாராய பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.